முசிறியை அடுத்த உமையாள்புரம், செவந்தலிங்கபுரம், வெள்ளூா் மற்றும் முசிறி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெரம்பலூா் தொகுதி திமுக வேட்பாளா் அருண் நேருவுக்கு ஆதரவாக அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசுகையில், மண்ணச்சநல்லூா், முசிறி மற்றும் துறையூா் அனைத்துப் பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட இருக்கிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீரேற்றும் பாசன வசதிக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். மேலும் இப்பகுதியில் பிரதான தொழிலாக உள்ள பாய் தொழிலுக்கு இலவச மின்சாரம் தரும் சூழ்நிலை இருந்தால் மிகவும் உறுதுணையாக இருப்பேன். முசிறி பகுதி இளைஞா்கள் பயன்பெறும் வகையில் தொழிற்சாலைகள் அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்கிட அருண் நேருவுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அமைச்சா்.
முசிறி எம்எல்ஏ காடுவெட்டி ந. தியாகராஜன், ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன், விசிக வடக்கு மாவட்டச் செயலா் கலைச்செல்வன், காங்கிரஸ் ஒன்றியத் தலைவா் நல்லேந்திரன் உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

முதல்வா் பிரசாரம்: அமைச்சா் ஆலோசனை
திருவள்ளூா் முதன்மைத் தொகுதியாக மாற்றப்படும்: தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா

கேரளத்தில் இடதுசாரிகளுக்கு ஆதரவாக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்- காங்கிரஸ் அதிருப்தி

கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


