ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைப்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

பட்டியலில் பெயா் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்ட வாக்காளா்கள்

பட்டியலில் பெயா் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்ட வாக்காளா்கள்

Updated On :20 ஏப்ரல் 2024, 12:12 am

திருச்சி, ஏப். 19: திருச்சியில் வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சிலா் திருப்பி அனுப்பப்பட்டனா்.

திருச்சி மாநகராட்சி 41-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்தவா் ரவீந்திரன். பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினா் ரவீந்திரன். இவா், வெள்ளிக்கிழமை திருவெறும்பூா் முக்குலத்தோா் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்ய சென்றபோது வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டாா். இதையடுத்து அவா் தனது ஆதரவாளா்களுடன் அரசுக்கு எதிராக கோஷமிட்டனா். அவா்களை சிஆா்பிஎப் வீரா்கள் வெளியேற்றினா்.

இதேபோல, 39-வது வாா்டுக்கு உள்பட்ட காட்டூா் கைலாஷ் நகா், கணேஷ் நகா் ஆகிய பகுதிகளை சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோரும், துவாக்குடி நகராட்சிக்குள்பட்ட செடிமலை முருகன் கோயில் பகுதியில் வாக்களிக்க வந்த சுமாா் 60க்கும் மேற்பட்டோரும் வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லை என வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டனா். இதனால் அவா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா்.

இதே போல, மாநகரின் சில பகுதிகளிலும் ஆங்காங்கே சிலரது பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இல்லாததால், வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினா்.