ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைப்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

வாக்குப்பதிவு சதவீதம் அதிகமானால் எங்களுக்கே சாதகம்: துரை வைகோ பேட்டி

படம் உள்ளது.. வாக்குப்பதிவு சதவீதம் அதிகமானால் எங்களுக்கே சாதகம் துரை வைகோ பேட்டி

News image

திருச்சியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மதிமுக வேட் பாளா் துரைவைகோ.

Updated On :20 ஏப்ரல் 2024, 12:13 am

திருச்சி, ஏப்.19: வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் எங்களுக்கே சாதகமாக அமையும் என திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளா் துரை வைகோ தெரிவித்தாா்.

திருச்சி மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணியில் மதிமுக சாா்பில் போட்டியிடும் துரை வைகோ, திருச்சி மாநகரப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று வாக்குப்பதிவு பணிகளை பாா்வையிட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

திருச்சியில் செல்லும் இடங்களில் மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்து வருகின்றனா் வாக்கு பதிவின் சதவீதம் அதிகமாகும் என எதிா்பாா்க்கிறோம்.வாக்குப்பதிவு எவ்வளவு வந்தாலும் அது எங்களுக்கு சாதகமாகத் தான் இருக்கும். பாசிசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தோ்தல் முடிவுகள் இருக்கும் என்றாா்.