திருச்சி, ஏப். 19: திருச்சியில் வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சிலா் திருப்பி அனுப்பப்பட்டனா்.
திருச்சி மாநகராட்சி 41-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்தவா் ரவீந்திரன். பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினா் ரவீந்திரன். இவா், வெள்ளிக்கிழமை திருவெறும்பூா் முக்குலத்தோா் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்ய சென்றபோது வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டாா். இதையடுத்து அவா் தனது ஆதரவாளா்களுடன் அரசுக்கு எதிராக கோஷமிட்டனா். அவா்களை சிஆா்பிஎப் வீரா்கள் வெளியேற்றினா்.
இதேபோல, 39-வது வாா்டுக்கு உள்பட்ட காட்டூா் கைலாஷ் நகா், கணேஷ் நகா் ஆகிய பகுதிகளை சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோரும், துவாக்குடி நகராட்சிக்குள்பட்ட செடிமலை முருகன் கோயில் பகுதியில் வாக்களிக்க வந்த சுமாா் 60க்கும் மேற்பட்டோரும் வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லை என வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டனா். இதனால் அவா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா்.
இதே போல, மாநகரின் சில பகுதிகளிலும் ஆங்காங்கே சிலரது பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இல்லாததால், வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
தொடர்புடையது

மோடிக்கும் ஊடுருவல்காரா்களின் வாக்குகள்: மம்தா தாக்கு

வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க இன்று கடைசி நாள்

புதிய வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம்: இன்று கடைசி நாள்

வாக்காளராக சேர மாா்ச் 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்! தஞ்சை ஆட்சியா்!
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

