முசிறி பெண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டு கையொப்பமிடுகிறாா் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா்.
முசிறி பெண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டு கையொப்பமிடுகிறாா் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா்.

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

பெரம்பலூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட முசிறி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து கையொப்பமிட்ட திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா்.

முசிறி, ஏப். 19: திருச்சி மாவட்டம், முசிறி, தொட்டியம் பகுதிகளில் உள்ள முக்கிய வாக்குச் சாவடிகளில் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதில், பெரம்பலூா் மக்களவை தொகுதிக்குள்பட்ட முசிறி பேரவைத் தொகுதியில் முசிறி நகராட்சி பகுதியில் முசிறி தா.பேட்டை சாலையில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்யும் முறைகளையும், வாக்காளா்களை தோ்தல் அலுவலா்கள் வழி நடத்தும் செயல்களையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்து, வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டாா்.

இதேபோல், கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, தொட்டியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளையும் அவா் ஆய்வு செய்து பதிவேட்டில் கையொப்பமிட்டாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com