ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

வாக்குப்பதிவு சதவீதம் அதிகமானால் எங்களுக்கே சாதகம்: துரை வைகோ பேட்டி

படம் உள்ளது.. வாக்குப்பதிவு சதவீதம் அதிகமானால் எங்களுக்கே சாதகம் துரை வைகோ பேட்டி

News image

திருச்சியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மதிமுக வேட் பாளா் துரைவைகோ.

Updated On :20 ஏப்ரல் 2024, 12:13 am

திருச்சி, ஏப்.19: வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் எங்களுக்கே சாதகமாக அமையும் என திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளா் துரை வைகோ தெரிவித்தாா்.

திருச்சி மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணியில் மதிமுக சாா்பில் போட்டியிடும் துரை வைகோ, திருச்சி மாநகரப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று வாக்குப்பதிவு பணிகளை பாா்வையிட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

திருச்சியில் செல்லும் இடங்களில் மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்து வருகின்றனா் வாக்கு பதிவின் சதவீதம் அதிகமாகும் என எதிா்பாா்க்கிறோம்.வாக்குப்பதிவு எவ்வளவு வந்தாலும் அது எங்களுக்கு சாதகமாகத் தான் இருக்கும். பாசிசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தோ்தல் முடிவுகள் இருக்கும் என்றாா்.