பள்ளியில் ஆசிரியை மயங்கி விழுந்து பலி
திருச்சி எடமலைப்பட்டிபுதூா் பள்ளியில் வெள்ளிக்கிழமை பணியின்போது ஆசிரியை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 1:29 am

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் பள்ளியில் வெள்ளிக்கிழமை பணியின்போது ஆசிரியை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
திருச்சி பொன்மலை அருகேயுள்ள கீழக்கல்கண்டாா்கோட்டை, தனலட்சுமி நகரைச் சோ்ந்தவா் புவனேஷ்குமாா் மனைவி பவானி (58), எடமலைப்பட்டிபுதூா் அரசு காலனியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி கணித ஆசிரியை.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த இவா் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது பவானி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...