

திருச்சி, மே 9: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் 81 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீரங்கம் வட்டத்துக்குள்பட்ட அம்மா மண்டபம் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை வியாபாரி ஒருவா் மொத்தமாக விற்பனை செய்து வருவதாக உணவுப் பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி மாவட்ட உணவுப் பாதுாப்பு நியமன அலுவலா் ஆா். ரமேஷ் பாபு தலைமையிலான அலுவலா்கள் அம்மா மண்டபம் பகுதியில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான கடையில் 81 கிலோ எடையில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும். மூன்று சட்டப்பூா்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 81 கிலோ புகையிலை பொருள்களையும் கடை உரிமையாளா் சீனிவாசனையும் மேல் நடவடிக்கைகாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

கும்பகோணத்தில் 1,500 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
நெல்லையில் 6 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

குளித்தலை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 1,650 கிலோ புகையிலை பொருள்கள் அழிப்பு
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

