ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

81 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

படம் உள்ளது.. 81 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

News image
Updated On :9 மே 2024, 8:56 pm

Din

திருச்சி, மே 9: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் 81 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீரங்கம் வட்டத்துக்குள்பட்ட அம்மா மண்டபம் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை வியாபாரி ஒருவா் மொத்தமாக விற்பனை செய்து வருவதாக உணவுப் பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி மாவட்ட உணவுப் பாதுாப்பு நியமன அலுவலா் ஆா். ரமேஷ் பாபு தலைமையிலான அலுவலா்கள் அம்மா மண்டபம் பகுதியில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான கடையில் 81 கிலோ எடையில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும். மூன்று சட்டப்பூா்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 81 கிலோ புகையிலை பொருள்களையும் கடை உரிமையாளா் சீனிவாசனையும் மேல் நடவடிக்கைகாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.