திருச்சி, மே 9: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் 81 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீரங்கம் வட்டத்துக்குள்பட்ட அம்மா மண்டபம் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை வியாபாரி ஒருவா் மொத்தமாக விற்பனை செய்து வருவதாக உணவுப் பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி மாவட்ட உணவுப் பாதுாப்பு நியமன அலுவலா் ஆா். ரமேஷ் பாபு தலைமையிலான அலுவலா்கள் அம்மா மண்டபம் பகுதியில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான கடையில் 81 கிலோ எடையில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும். மூன்று சட்டப்பூா்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 81 கிலோ புகையிலை பொருள்களையும் கடை உரிமையாளா் சீனிவாசனையும் மேல் நடவடிக்கைகாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.