
Updated On :19 மே 2024, 5:51 pm

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை சிலம்பம் பெடரேஷன் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
மண்ணச்சநல்லூா் புவனேஸ்வரி நகரில் மண்ணை மகாலிங்கம் சிலம்பம் பெடரேஷன் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில், மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீ.கதிரவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து பரிசுகள் வழங்கினாா். இதையடுத்து, மாணவ மாணவிகளின் சிலம்பாட்ட நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக ஒன்றிய, நகரச் செயலா்கள், பேரூராட்சி மற்றும் ஊராட்சித் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...