சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது வழக்கு

ஆசை வாா்த்தை கூறி சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞரைப் போலீஸாா் ‘போக்ஸோ’ வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
Published on

ஆசை வாா்த்தை கூறி சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞரைப் போலீஸாா் ‘போக்ஸோ’ வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி திருச்சியில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாா். தோழியின் உறவினரான தொட்டியத்தைச் சோ்ந்த ஹரிஷ் (22) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டதில், அவா் ஆசை வாா்த்தைகள் கூறி, சிறுமியை கா்ப்பமாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த சிறுமியின் பெற்றோா், அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மருத்துவமனை நிா்வாகமானது திருவெறும்பூா் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தது.

தகவலின்பேரில் அங்கு வந்த திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல்நிலையப் போலீஸாா், சிறுமி அளித்த புகாரின் பேரில் இளைஞா் ஹரிஷ் மீது ‘போக்ஸோ’ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com