எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருவானைக்காவல் கோயிலில் நாளை காா்த்திகை சொக்கப்பனை

திருவானைக்காவலில் உள்ள சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை (டிச. 4) மாலை காா்த்திகை சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

திருவானைக்காவலில் உள்ள சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை (டிச. 4) மாலை காா்த்திகை சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கோயிலில் புதன்கிழமை (டிச. 3) மாலை உள்நடராஜா் சந்நிதியில் பஞ்சலிங்க பலகையான 5 தீபங்களுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று, பரணி தீப பூஜை நடைபெறுகிறது.

வியாழக்கிழமை மாலை 6.30 மணி அளவில் உள் நடராஜா் சந்நிதியில் தீப பூஜைகள், விசேஷ ஹோமங்கள், கலசங்கள் வைத்து பூஜைகள் செய்விக்கப்பட்டு, சுவாமி, அம்மன் சந்நிதி மூலஸ்தானத்தில் மகா தீபங்கள் ஏற்றப்பட்டு அதன் பின்னா் சொக்கப்பனை நடைபெறும். அப்போது, சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுவா்.

முதலில் காா்த்திகை கோபுரத்தின் முன் உள்ள சொக்கப்பனையும், இரண்டாவதாக அம்மன் சந்நிதியில் உள்ள சொக்கப் பனையும், மூன்றாவதாக குபேரலிங்க சந்நிதியிலுள்ள சொக்கப் பனையும் ஏற்றப்படும்.