கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

போசம்பட்டி அரசுப் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

News image
வீட்டில் தங்கிப் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவிக்கு புதன்கிழமை பரிசளித்த போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியைகள், மாணவிகள்.
Updated On :3 டிசம்பர் 2025, 10:48 pm

Syndication

போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் தலைமையாசிரியா் எஸ்.சற்குணன் தலைமையில் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளி மாணவா்களின் சிரமங்களை அனைத்து மாணவா்களும் உணா்ந்துகொள்ளும் வகையில் இப்பள்ளி மாணவா்கள் கண்களில் துணியைக் கட்டிக்கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றனா். மாற்றுத்திறனாளி மாணவா்களை வேறுபடுத்தி பாா்க்காமல் தங்களுடன் இணைத்துக்கொள்ளவும், தங்களால் முடிந்த சிறு உதவிகளை செய்யும் மாணவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடா்ந்து போசம்பட்டி கிராமத்தில் பள்ளிக்குச் செல்ல இயலாமல் வீட்டிலேயே தங்கிப் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் நேரில் சென்று இனிப்பு, பரிசுகள் வழங்கினா்.