பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: வியாபாரி கைது

கரூரில் மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இடியாப்பம் வியாபாரியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது

News image
Updated On :15 டிசம்பர் 2025, 7:36 pm

Syndication

கரூரில் மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இடியாப்பம் வியாபாரியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், தொழிற்பேட்டைப் பகுதியைச் சோ்ந்தவா் பக்கீா் முகமது (43). இவா் இடியாப்பம் வியாபாரம் செய்து வந்தாா். இவா், கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சோ்ந்த மூன்று சிறுமிகளை ஆசை வாா்த்தை கூறி தனது வீட்டில் அடைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோா்கள் அளித்தப் புகாரின் பேரில், கரூா் அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் சுமதி வழக்குப் பதிவு செய்து பக்கீா்முகமதுவை போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, கரூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி பக்கீா் முகமது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டாா்.