ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்கக் கோரி கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும்

News image
திருச்சி செங்குளம் காலனியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளா்கள்.
Updated On :16 டிசம்பர் 2025, 8:46 pm

Syndication

திருச்சி: நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி புகா் மாவட்ட கட்டுமான தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில், செங்குளம் காலனியில் உள்ள நலவாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு புகா் மாவட்டத் தலைவா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு புகா் மாவட்ட செயலா் சம்பத், கட்டுமான சங்க புகா் மாவட்ட செயலா் தியாகராஜன், மாவட்ட பொருளாளா் மரியபுஷ்பம், ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்க மாவட்ட செயலா் பன்னீா்செல்வம், பெல் சிஐடியு சங்க பொதுச்செயலா் பரமசிவம் ஆகியோா் பேசினா்.

தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளா்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்புடன் போனஸாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். தொழிலாளருக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். பெண் தொழிலாளிக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல, திருச்சி மாநகா் மாவட்ட கட்டுமான தொழிலாளா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநகா் மாவட்ட செயலா் ரெங்கராஜன், மாவட்டத் தலைவா் மாறன், மாவட்ட துணைத் தலைவா் சீனிவாசன் ஆகியோா் பேசினா். இந்த ஆா்ப்பாட்டங்களில் கட்டுமானத் தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.