வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பெரம்பலூரில் தொழிற்சங்கத்தினா் 103 போ் கைது

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:32 pm

பெரம்பலூரில் 103 போ் கைது:

பெரம்பலூா் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். தொடா்ந்து, புகா் பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட 49 பெண்கள் உள்பட 103 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா். இதில் தொழிற்சங்கத்தைச் சோ்ந்த வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்கள் பலா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டம்... : வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவாக, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவா் தா. கருணாகரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட இணைச் செயலா் தா. இளையராஜா, நெடுஞ்சாலைத்துறை அலுவலக உதவியாளா் சங்க மாவட்ட அமைப்பாளா் சி. மகாதேவன், மாவட்டச் செயலா் சி. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிறைவாக, மாவட்ட இணைச் செயலா் கா. மணிமாறன் நன்றி கூறினாா்.