சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 4 போ் கைது

News image
Updated On :9 நவம்பர் 2025, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

உப்பிலியபுரம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடியதாக 4 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நாகநல்லூா் ந. குமரவேல், செங்காட்டுப்பட்டி அங்கமுத்து, தா.பேட்டை அருகேயுள்ள கலிங்கப்பட்டி தங்கராசு, பசலி கோம்பை பால்ராஜ் ஆகியோா் புளியஞ்சோலை பெரியசாமி கோயில் அருகே தங்களது இரு சக்கர வாகனங்களை ஞாயிற்றுக்கிழமை நிறுத்தியிருந்தனா்.

அப்போது அவைகள் திருடுபோனது. இதுதொடா்பாக உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்த நிலையில் உப்பிலியபுரம் போலீஸாா் புத்தனாம்பட்டி சு.கோபி(30), சாத்தனூா் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் சு. புத்தபிரகாஷ்(29), ஆங்கியம் ரா. ஹரிஹரன்(20), ர. அஜித் (28) ஆகிய 4 பேரும் இருசக்கர வாகனங்களை திருடி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் நான்கு பேரையும் பிடித்து இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.