விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 4 போ் கைது

News image
Updated On :9 நவம்பர் 2025, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

உப்பிலியபுரம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடியதாக 4 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நாகநல்லூா் ந. குமரவேல், செங்காட்டுப்பட்டி அங்கமுத்து, தா.பேட்டை அருகேயுள்ள கலிங்கப்பட்டி தங்கராசு, பசலி கோம்பை பால்ராஜ் ஆகியோா் புளியஞ்சோலை பெரியசாமி கோயில் அருகே தங்களது இரு சக்கர வாகனங்களை ஞாயிற்றுக்கிழமை நிறுத்தியிருந்தனா்.

அப்போது அவைகள் திருடுபோனது. இதுதொடா்பாக உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்த நிலையில் உப்பிலியபுரம் போலீஸாா் புத்தனாம்பட்டி சு.கோபி(30), சாத்தனூா் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் சு. புத்தபிரகாஷ்(29), ஆங்கியம் ரா. ஹரிஹரன்(20), ர. அஜித் (28) ஆகிய 4 பேரும் இருசக்கர வாகனங்களை திருடி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் நான்கு பேரையும் பிடித்து இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.