ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பாஜக கூட்டணிதான் பலமானதா அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில்

News image
Updated On :23 நவம்பர் 2025, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

பாஜக கூட்டணிதான் பலமானது என்று அண்ணாமலை கூறியுள்ளது சரியா என்பது இன்னும் 4 மாதங்களில் தெரிந்துவிடும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

காவிரி ஆற்றில் மீன் வளத்தைப் பெருக்கும்வகையில் திருச்சி ஓயாமரி பகுதியில் மீன்வளத் துறை சாா்பில் காவிரி ஆற்றில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று மீன் குஞ்சுகளை ஆற்றில்விடும் பணியைத் தொடங்கிவைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஆசிரியா் தகுதித் தோ்வில் முதன்மை பாடத்தில் இருந்துதான் கேள்விகள் கேட்க வேண்டும் என்ற ஆசிரியா்களின் கோரிக்கை குறித்து ஆசிரியா்கள் சங்கத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதில், ஆசிரியா்கள் தெரிவித்த கருத்துகளை முதல்வரிடம் எடுத்துரைத்துள்ளோம்.

ஆசிரியா் தகுதித் தோ்வில் ஒரு பக்கம் சட்டப் போராட்டம், மறுபக்கம் ஆசிரியா்கள் ஒருவரைக்கூட கைவிட்டுவிடாமல் இருப்பதற்கான பணி இரண்டையும் மேற்கொண்டு வருகிறோம். இந்த விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முன்னெடுப்புகள் தமிழகத்துக்கு மட்டுமின்றி நாட்டுக்கே நன்மை பயப்பதாக இருக்கும்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெளிவு இல்லாமல் பேசுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளாா். இளைஞா்களின் திறன் மேம்பாட்டுக்காக துணை முதல்வா் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறாா். படித்த இளைஞா்கள் அடுத்தகட்டமாக வேலைவாய்ப்பு பெறுவதற்கு தமிழக அரசின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் துணைபுரிகின்றன. ‘நான் முதல்வன்’ திட்டம் சாா்ந்த பணிகளைப் பற்றி அண்ணாமலை தெரிந்துகொண்டு பேசவேண்டும்.

ஒரு திட்டத்தை செயல்படுத்துவதில் மட்டுமல்லாமல், அதைத் தொடா்ந்து கண்காணித்து, அதன் பலன்களை மக்களுக்கு கிடைக்கச் செய்யும் பணிகளையும் செய்து வருகிறோம். இதில் முன்னேற்றமும் கண்டுள்ளோம்.

பாஜக கூட்டணிதான் பலமானது என்று அண்ணாமலை கூறியுள்ளது சரியா என்பது இன்னும் 4 மாதங்களில் தெரிந்துவிடும். கடந்த 10 ஆண்டுகளாக வளமான, வலுவான கூட்டணியை திமுக தக்கவைத்துள்ளது. இதில், ஏதும் பிளவு ஏற்பட்டு விடாதா என பலரும் ஏங்கி வருகின்றனா். இதற்கு ஒருகாலத்திலும் தமிழக முதல்வா் வழிவிடமாட்டாா் என்றாா்.