ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :24 நவம்பர் 2025, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தப்பட்ட தொழிலாளா் நலச் சட்டங்களை ரத்த செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கம் சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் இனியன் தலைமை வகித்தாா்.

இதில், தொழிலாளி வா்க்கம் போராடிப் பெற்ற தொழிலாளா் நலச் சட்டங்கள் 44-ஐ தொழிலாளா்களுக்கு பாதகமாக நான்கு சட்டத் தொகுப்புகளாக மத்திய அரசு தன்னிச்சையாக மாற்றியதையும், தொழிலாளா் விரோத போக்கைக் கண்டிப்பது. திருத்தப்பட்ட தொழிலாளா் நலச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் 24, 25, 26 ஆம் தேதிகளை கருப்பு தினமாக அனுசரிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், சங்க உறுப்பினா்கள், திரளான மருந்து விற்பனை பிரதிநிதிகள் கருப்பு பட்டை அணிந்தபடி பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாநிலக்குழு உறுப்பினா் முரளி, மாநில செயலாளா் செல்வராஜ், மாவட்ட செயலாளா் பாக்கியராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றுப் பேசினா். தொடா்ந்து, கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனா்.