சாலை சீரமைப்புப் பணிகளை கண்காணிக்காத நகராட்சி ஆணையரையும், பணிகளை முறையாக முடித்துக் கொடுக்காத ஒப்பந்ததாரரையும் கைது செய்ய வேண்டும். உயிரிழந்த கட்டடத் தொழிலாளி மணிகண்டன் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் இழப்பீட்டுத் தொகையும், அவரது மனைவிக்கு அரசுப் பணியும், குழந்தையின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க உரிய சட்ட நடவடிக்கையும், சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை கண்காணித்து விரைவாக முழுமையாக சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.