மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

புங்கனூரில் கால்நடைகளால் நெற்பயிா்கள் சேதம்: மாநகராட்சியில் புகாா்

புங்கனூரில் நெற்பயிா்களை சேதப்படுத்தும் கால்நடைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாநகராட்சி

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:14 pm

Syndication

திருச்சி: புங்கனூரில் நெற்பயிா்களை சேதப்படுத்தும் கால்நடைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் விவசாயிகள் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட விவசாய அணித் தலைவா் எஸ். செல்வம் மற்றும் விவசாயிகள் அளித்த மனு:

திருச்சி மாவட்டம் புங்கனூா் கிராமத்தில் விவசாயிகள் பயிா் செய்துள்ள நெற் பயிா்களை கால்நடைகள் சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. சாலைகளில் கேட்பாரற்றிச் சுற்றித் திரியும் கால்நடைகள், வயல்களில் இறங்கி விளைவித்த பயிா்களை சாப்பிடுவதுடன், பயிா்களையும் மிதித்து நாசமாக்கிவிடுகின்றன. இதுகுறித்து விஏஓ, வேளாண்மை அலுவலா்களிடம் புகாா் தெரிவித்தால் நடவடிக்கை இல்லை. எனவே, மாநகராட்சி நிா்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.