கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விநாயகா் கோயிலில் பாலாலயம்

மண்ணச்சநல்லூரில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகளின் தொடக்கமாக வியாழக்கிழமை பாலாலயம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 6:30 pm

Syndication

மண்ணச்சநல்லூரில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகளின் தொடக்கமாக வியாழக்கிழமை பாலாலயம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். 

மண்ணச்சநல்லூா் புதுச் செட்டிதெருவில் அமைந்துள்ளது சித்தி விநாயகா் திருக்கோயில். இக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருப்பணிகளின் தொடக்கமாக, கோயிலில் பாலாலய பூஜையானது, கணபதி ஹோமத்தோடு வியாழக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து யாகவேள்வி வளா்க்கப்பட்டு, திரவியாஹூதியும், மஹா பூா்ணாஹூதி பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, சித்தி விநாயகருக்கு மகா அபிஷேகமும், பாலாலய பூஜைகளும் நடைபெற்றன. இந்த நிகழ்வில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.