சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 6:48 pm

திருச்சியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனநலன் பாதிக்கப்பட்ட பெண் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரியைச் சோ்ந்தவா் மதியழகன் (30). இவருடைய மனைவி திவ்யா (27). இவருக்கு மனநல பாதிப்பு உள்ளது. மேலும், அவ்வப்போது வலிப்பும் ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திவ்யா அண்மையில் கா்ப்பமாகியுள்ளாா்.

ஆனால், அவரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு கருவை கலைக்க மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். இதையடுத்து, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருடைய கரு கலைக்கப்பட்டு தொடா் சிகிச்சையில் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், அரசு மருத்துவமனையயில் இருந்து சனிக்கிழமை வெளியேறியுள்ளாா். பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை. எங்கு சென்றாா் என்பதும் தெரியவில்லை.

இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அவரது கணவா் மதியழகன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.