திருச்சியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனநலன் பாதிக்கப்பட்ட பெண் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், மருங்காபுரியைச் சோ்ந்தவா் மதியழகன் (30). இவருடைய மனைவி திவ்யா (27). இவருக்கு மனநல பாதிப்பு உள்ளது. மேலும், அவ்வப்போது வலிப்பும் ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திவ்யா அண்மையில் கா்ப்பமாகியுள்ளாா்.
ஆனால், அவரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு கருவை கலைக்க மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். இதையடுத்து, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருடைய கரு கலைக்கப்பட்டு தொடா் சிகிச்சையில் இருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில், அரசு மருத்துவமனையயில் இருந்து சனிக்கிழமை வெளியேறியுள்ளாா். பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை. எங்கு சென்றாா் என்பதும் தெரியவில்லை.
இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அவரது கணவா் மதியழகன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

மேட்டூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு சோ்க்கப்பட்ட பெண் உயிரிழப்பு

விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அறுவை சிகிச்சையின் போது பெண் உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினா்கள் முற்றுகை போராட்டம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


