/
திருச்சியில் நகைக் கடைக்கு வேலைக்குச் சென்ற திருமணமான பெண் காணாமல் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குபட்ட பீரங்கிக்குல்லா வீதியைச் சோ்ந்தவா் ஆா். ராஜரத்தினம் (31). இவரின் 29 வயதுள்ள மனைவி பெரிய கடைவீதியிலுள்ள நகைக் கடையில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 9) வேலைக்குச் சென்ற அந்தப் பெண், கடையில் இருந்து 3 மணிக்கே கிளம்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவா் வீட்டுக்கு வரவில்லை. அவரை அவரது கணவா் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் ராஜரத்தினம் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

தொழிற்சாலையில் பணியின்போது பெண் தொழிலாளி உயிரிழப்பு

காா் மோதியதில் பெண் படுகாயம்

துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் தடை

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



