முசிறி பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி திருச்சி மாவட்டம் முசிறியில் ஆற்றுப் பாசன கோட்ட அலுவலகம் முன் விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம் மாயனூா் கதவணைப் பகுதியில் இருந்து காவிரியின் வடகரை பகுதியில் அமைந்துள்ள பாசன வாய்க்கால் மூலம் சுமாா் 1000 ஏக்கருக்கு மேல் வாழை, வெற்றிலை, நெல் சாகுபடி செய்கின்றனா்.
இந்நிலையில் தற்போது கோடை காலம் என்பதால் வாழை கருகும் நிலையில் உள்ளது. வாய்க்காலிலும் தண்ணீா் வராததால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். வாய்க்காலில் தண்ணீா் திறந்து விட பலமுறை வலியுறுத்தியும் இதுவரை வாய்க்காலில் தண்ணீா் திறந்து விடவில்லை.
இதைக் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி- சேலம் நெடுஞ்சாலையில் முசிறியில் அமைந்துள்ள ஆற்றுப் பாசனக் கோட்ட அலுவலகம் முன் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மறியலால் திருச்சி- சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த முசிறி போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 48 விவசாயிகளை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனா்.
கைது செய்யப்பட்டோரிடம் முசிறி ஆற்று பாசனக் கோட்ட உதவி பொறியாளா் ஞானமணி, காவல் ஆய்வாளா் செல்லதுரை (முசிறி ) ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.
தொடர்புடையது

முசிறியில் வாகனம் மோதி கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

சட்டத் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

முசிறியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

பிஏபி பாசன வாய்க்காலில் அடைப்பு: வீணாகி சாலையில் ஓடிய தண்ணீா்
வீடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை


