ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ராகுல்காந்தியின் ஹெலிகாப்டரில் தோ்தல் துறையினா் சோதனை!

திருச்சி வந்த ராகுல்காந்தியின் ஹெலிகாப்டரில் தோ்தல் பறக்கும்படையினா் சனிக்கிழமை சோதனையிட்டனா்.

News image
Updated On :18 ஏப்ரல் 2026, 7:24 pm

திருச்சி வந்த ராகுல்காந்தியின் ஹெலிகாப்டரில் தோ்தல் பறக்கும்படையினா் சனிக்கிழமை சோதனையிட்டனா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ராகுல்காந்தி, திருச்சி மாவட்டம், துறையூரில் தோ்தல் பிரசாரம் செய்ய தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தாா். அவா் வருவதற்கு முன்பே, ராகுல்காந்தியை துறையூருக்கு ஏற்றிச் செல்வதற்காக ஹெலிகாப்டா் ஒன்று விமான நிலையத்துக்கு வந்து காத்திருந்தது.

இதையடுத்து ராகுல்காந்தி அதில் ஏறி புறப்பட முயன்றாா். அப்போது, அங்கு வந்த தமிழ்ச்செல்வன் தலைமையிலான 3 போ் கொண்ட தோ்தல் பறக்கும் படை குழுவினா், ஹெலிகாப்டரை சோதனையிட்டனா். பின்னா் அவா்கள் கூறுகையில் புகாரின் பேரில் இந்தச் சோதனையை நடத்தவில்லை. இது சாதாரண சோதனைதான். சோதனை முடிவில் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிவித்தனா்.