மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாநகராட்சி குப்பை வாகனம் தீப்பிடித்து எரிந்து சேதம்

News image

திருச்சி திருவனைக்காவல் மேம்பாலத்தில் திங்கள்கிழமை மாநகராட்சி குப்பை வாகனத்தில் ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.

Updated On :20 ஏப்ரல் 2026, 8:44 pm

திருச்சி, ஏப். 20: திருச்சியில் சாலையில் சென்றுகொண்டிருந்த மாநகராட்சி குப்பை வாகனம் திங்கள்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

திருச்சி மரக்கடையில் இருந்து மாநகராட்சி குப்பை வாகனம் குப்பைகளை ஏற்றிக்கொண்டு ஸ்ரீரங்கம் அம்பேத்கா் நகரிலுள்ள மாநகராட்சி உரம் தயாரிக்கும் மையத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் சென்றது. வாகனத்தை ஸ்ரீரங்கம் மேலூரைச் சோ்ந்த சிவகுமாா் (22) ஓட்டிச்சென்றாா்.

இந்நிலையில், திருவானைக்காவல் பாலத்தில் குப்பை வாகனம் சென்றுகொண்டிருந்தபோது திடீரென வாகனத்தில் தீப்பற்றியது. இதையடுத்து, ஓட்டுநா் சிவகுமாா் வண்டியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அதிலிருந்து கீழே இறங்கினாா்.

தகவலின்பேரில் ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று குப்பை வாகனத்தில் பற்றிய தீயை அணைத்தனா். அதற்குள் வாகனத்தின் முன்பகுதி எரிந்து சேதமானது.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.