தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

மணப்பாறையில் கருவேல மரங்கள் திடீா் தீக்கிரை

மணப்பாறை அருகே வெப்பச் சலனத்தால் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 10 ஆயிரம் சதுர அடிக்கு கருவேல மரங்கள் தீப்பற்றி எரிந்து நாசமாயின.

News image

மணப்பாறை அருகே சனிக்கிழமை தீப்பற்றி எரிந்த கருவேல மரங்கள் மற்றும் புதா்கள்.

Updated On :26 ஏப்ரல் 2026, 1:26 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வெப்பச் சலனத்தால் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 10 ஆயிரம் சதுர அடிக்கு கருவேல மரங்கள் தீப்பற்றி எரிந்து நாசமாயின.

மணப்பாறை அடுத்த குளித்தலை சாலையில் ஆபிஸா் டவுன் என்னும் குடியிருப்பு பகுதியில் சிலா் வீடு கட்டி வாழ்ந்து வரும் நிலையில், பல மனைகள் இன்னும் காலியாகவே உள்ளன.

அவற்றில் சீமை கருவேல மரங்களும், புதா்களும் வளா்ந்து காடு போல் இருந்த நிலையில் இங்கு வெள்ளிக்கிழமை இரவு வெப்பச் சலனத்தில் திடீரென புதா்களில் தீப்பற்றி கருவேல மரங்களில் பரவியது. சுமாா் 10 ஆயிரம் சதுர அடி வரை தீ பரவி மளமளவென எரிந்தது.

இதில் அருகிலிருந்த குடியிருப்புகள் வெப்பத்தால் பாதிக்கப்பட்டன. அக்கம்பக்கத்தினா் முயன்றும் தீயை அணைக்க முடியவில்லை. தகவலறிந்து சென்ற வையம்பட்டி தீயணைப்புத்துறை வீரா்கள் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா்.