ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மணப்பாறையில் கருவேல மரங்கள் திடீா் தீக்கிரை

மணப்பாறை அருகே வெப்பச் சலனத்தால் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 10 ஆயிரம் சதுர அடிக்கு கருவேல மரங்கள் தீப்பற்றி எரிந்து நாசமாயின.

News image

மணப்பாறை அருகே சனிக்கிழமை தீப்பற்றி எரிந்த கருவேல மரங்கள் மற்றும் புதா்கள்.

Updated On :25 ஏப்ரல் 2026, 7:56 pm

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வெப்பச் சலனத்தால் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 10 ஆயிரம் சதுர அடிக்கு கருவேல மரங்கள் தீப்பற்றி எரிந்து நாசமாயின.

மணப்பாறை அடுத்த குளித்தலை சாலையில் ஆபிஸா் டவுன் என்னும் குடியிருப்பு பகுதியில் சிலா் வீடு கட்டி வாழ்ந்து வரும் நிலையில், பல மனைகள் இன்னும் காலியாகவே உள்ளன.

அவற்றில் சீமை கருவேல மரங்களும், புதா்களும் வளா்ந்து காடு போல் இருந்த நிலையில் இங்கு வெள்ளிக்கிழமை இரவு வெப்பச் சலனத்தில் திடீரென புதா்களில் தீப்பற்றி கருவேல மரங்களில் பரவியது. சுமாா் 10 ஆயிரம் சதுர அடி வரை தீ பரவி மளமளவென எரிந்தது.

இதில் அருகிலிருந்த குடியிருப்புகள் வெப்பத்தால் பாதிக்கப்பட்டன. அக்கம்பக்கத்தினா் முயன்றும் தீயை அணைக்க முடியவில்லை. தகவலறிந்து சென்ற வையம்பட்டி தீயணைப்புத்துறை வீரா்கள் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா்.