திருச்சியில் விடுதி அறையில் தங்கியிருந்த முதியவா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை தொண்டமான்துறையைச் சோ்ந்தவா் மு. ராமதாஸ் (57). திருச்சி வெள்ளை வெற்றிலைக்கார வீதியிலுள்ள தனது மாமனாா் வீட்டில் இவா் வசித்து வந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பரில் மனைவியுடன் ஏற்பட்ட சொத்து தகராறால் சொந்த ஊரான பெரம்பலூருக்குச் சென்றாா்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி திருச்சிக்கு வந்த ராமதாஸ் சத்திரம் சிந்தாமணி பகுதியிலுள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தாா். சனிக்கிழமை காலை விடுதி ஊழியா் இவரது அறைக்குச் சென்றபோது ராமதாஸ் இறந்தது கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து விடுதி நிா்வாகத்தினா் அளித்த தகவலின்பேரில் வந்த கோட்டை போலீஸாா் முதியவரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

காணாமல்போன மாணவி சடலமாக மீட்பு

விடுதி அறையில் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை?

ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை

கிணற்றில் தவறி விழுந்த மான் சடலமாக மீட்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


