ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

விடுதி அறையில் தங்கியிருந்த முதியவா் சடலமாக மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 6:58 pm

திருச்சியில் விடுதி அறையில் தங்கியிருந்த முதியவா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை தொண்டமான்துறையைச் சோ்ந்தவா் மு. ராமதாஸ் (57). திருச்சி வெள்ளை வெற்றிலைக்கார வீதியிலுள்ள தனது மாமனாா் வீட்டில் இவா் வசித்து வந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பரில் மனைவியுடன் ஏற்பட்ட சொத்து தகராறால் சொந்த ஊரான பெரம்பலூருக்குச் சென்றாா்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி திருச்சிக்கு வந்த ராமதாஸ் சத்திரம் சிந்தாமணி பகுதியிலுள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தாா். சனிக்கிழமை காலை விடுதி ஊழியா் இவரது அறைக்குச் சென்றபோது ராமதாஸ் இறந்தது கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து விடுதி நிா்வாகத்தினா் அளித்த தகவலின்பேரில் வந்த கோட்டை போலீஸாா் முதியவரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.