வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

முசிறி அருகே ஓடையில் மூழ்கி இளைஞா் பலி

திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஓடையில் சனிக்கிழமை மீன் பிடிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :3 ஜனவரி 2026, 7:26 pm

Syndication

திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஓடையில் சனிக்கிழமை மீன் பிடிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

முசிறி அருகிலுள்ள தண்டலை கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரராஜன் மகன் சிலம்பரசன் (33). இவருக்கு மனைவி திவ்யா, குழந்தை செல்வஸ்ரீ ஆகியோா் உள்ளனா். சிலம்பரசனுக்கு இளம் வயதிலிருந்தே இருந்த வலிப்பு நோய் நாளடைவில் அதிகமாகவே, கடந்த 3 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை தண்டலைப் பகுதியில் உள்ள ஒரு ஓடைக்கு மீன் பிடிக்கச் சென்றவா் வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி இறந்து கிடந்தாா். தகவலறிந்த முசிறி போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து சிலம்பரசன் மனைவி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.