தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விதிமீறி வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை

News image
திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் விதி மீறி வந்த கனரக வாகனத்தை ஞாயிற்றுக்கிழமை எச்சரித்த போக்குவரத்துத் துறையினா்.
Updated On :4 ஜனவரி 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையின் பால்பண்ணை பகுதியில் விதிமீறி வரும் வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை கண்காணித்து, எச்சரிக்கை விடுத்து அனுப்பினா்.

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையறிந்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா்அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் அண்மையில் பால்பண்ணை பகுதியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, ஆட்சியா் வே. சரவணன் கடந்த 1-ஆம் தேதி முதல் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழியாக கனரக வாகனங்கள் இயக்கக் கூடாது. துவாக்குடி - பஞ்சப்பூா் சாலை வழியாக இயக்கவும் உத்தரவிட்டாா்.

அதனடிப்படையில், கனரக வாகனங்கள், ஒரு நிறுத்த புறநகா் பேருந்துகள் துவாக்குடியில் இருந்து பஞ்சப்பூா் சாலையில் சென்று வருகிறது. ஒரு சில பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வருகிறது. இதனால் அச்சாலையின் பழைய பால்பண்ணை நான்கு வழி சாலை சந்திப்புப் பகுதியில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில், திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நடராஜன், ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுரேஷ் பாபு உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை கண்காணித்து, ஆட்சியா் உத்தரவை மீறி வரும் வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினா்.