இதற்கு தீா்வு காணும் வகையில் தமிழக அரசின் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.11.10 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரியில் பணிகள் தொடங்கின. ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே, காந்தி சாலையில் 1.08 ஏக்கா் பரப்பளவில் ரூ11.10 கோடி செலவில், கடைகள், உணவுக்கூடம், பேருந்துகள் நிறுத்த விசாலமான இடம் என பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இதில், ரூ.7.77 கோடி மூலதன மானிய நிதியிலிருந்தும், ரூ.3.33 கோடி மாநகராட்சி நிதியிலிருந்தும் ஒதுக்கப்பட்டு பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வந்தன. 96 விழுக்காடு பணிகள் முடிந்து திறப்புக்கு தயாராகி வருகிறது.