அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஏலச்சீட்டு நடத்தி ரூ.7.48 லட்சம் மோசடி செய்தவா் கைது

திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.7.48 லட்சம் மோசடி செய்தவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 8:30 pm

Syndication

திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.7.48 லட்சம் மோசடி செய்தவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், துறையூா் காளிப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் அப்பாவுதுரை. இவா், கடந்த 15 ஆண்டுகளாக ஸ்ரீ மாரியம்மன் சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தாா்.

இதில், ரூ.1 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் என பல்வேறு ஏலச்சீட்டுகள், தீபாவளி சீட்டுகளை நடத்தி வந்தாா். இவரது நிறுவனத்தில் பலரும் சீட்டுக் கட்டியுள்ளனா்.

இந்நிலையில், பல்வேறு நபா்களிடம் ஏலச்சீட்டு பெற்று அதைத் திருப்பித் தராமல் ரூ.7.48 லட்சம் வரை மோசடி செய்ததாக துறையூா் காளிப்பட்டியைச் சோ்ந்த பி.தனசேகரன், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் அண்மையில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட அப்பாவுதுரையை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மேலும், இவரிடம் ஏலச்சீட்டு கட்டி ஏமாந்தவா்கள் திருச்சி மன்னாா்புரம் காஜாமலை பகுதியிலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்துள்ளனா்.