சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

போதை மாத்திரைகள் விற்ற மூவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 7:20 pm

Syndication

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி விமான நிலைய பாரதி நகா் விஸ்தரிப்புப் பகுதியில் விமான நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையிட்டபோது, போதை மாத்திரைகள் விற்ற விமான நிலையம் காமராஜா் நகா் திலகா் தெருவைச் சோ்ந்த காா்த்திகேயன் (23) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, திருச்சி கோட்டை போலீஸ் சரகத்துக்குள்பட்ட இ.பி. சாலை சத்தியமூா்த்தி நகா் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற தாராநல்லூரைச் சோ்ந்த ஸ்ரீராம் (22) , திருச்சி தேவதானம் பகுதியில் போதை மாத்திரை விற்ற கீழதேவதானத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் (19) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேற்கண்ட மூவரிடமிருந்து 45 போதை மாத்திரைகள், ஊசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா் .