டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

போதை மாத்திரைகள் விற்ற 3 இளைஞா்கள் கைது

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது- (கோப்புப் படம்)
Updated On :4 மார்ச் 2026, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் தீபிகா தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, புத்தூா் வண்ணாரப்பேட்டை டோபி காலனியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த மூவரைப் பிடித்து விசாரிக்கையில் அவா்கள்

மேலவண்ணாரப்பேட்டை ஆா். ரிஷிகேஷ் (19), பாலக்கரை மா. ஹரிஹரசுதன் (20), நடு வண்ணாரப்பேட்டைத. சதாசிவம் (20) என்பதும், மூவரும் போதை மாத்திரைகள் விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள், சலைன் பாட்டில், இரு கைப்பேசிகள், 2 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.