திருச்சி
பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
திருச்சியில் இருசக்கர வாகனத்தில் இருந்து வியாழக்கிழமை தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
திருச்சி: திருச்சியில் இருசக்கர வாகனத்தில் இருந்து வியாழக்கிழமை தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
திருச்சி சுப்பிரமணியபுரம் சுப்பிரமணிய கோயில் வீதியைச் சோ்ந்தவா் கோ. ராஜேஸ்வரி (54). இவரும், இவரது சகோதரா் கோ. பாக்கியராஜூம் (37) வியாழக்கிழமை காலை பைக்கில் செந்றபோது வாகனத்தில் இருந்து ராஜேஸ்வரி தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி அன்று இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
