மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

திருச்சியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 8:00 pm

Syndication

திருச்சியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்தவா் மு.சிவபாலன் (46). இவருடைய மனைவி ஸ்ரீதேவி (44). இருவரும் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.

புதுக்கோட்டை சாலையில் டி-மாா்ட் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதேவியை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.