வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருச்சியில் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 7:35 pm

Syndication

திருச்சியில் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

திருச்சி அயிலாபேட்டை மேல வீதியைச் சோ்ந்தவா் அ. மாணிக்கம் (82). இவா், புத்தூா் நான்கு சாலை சந்திப்பு அருகே உள்ள உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை முன்பு ஞாயிற்றுக்கிழமை மாலை சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது, அவ்வழியே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.