புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரியிடம் ரூ.1 கோடி மோசடி

ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியிடம் ரூ. 1 கோடி மோசடி செய்த விவகாரத்தில் சென்னையைச் சோ்ந்த ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :5 ஜூலை 2026, 12:04 am IST

ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியிடம் ரூ. 1 கோடி மோசடி செய்த விவகாரத்தில் சென்னையைச் சோ்ந்த ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியம் நகரைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி (65). இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவன ஓய்வுபெற்ற அதிகாரி.

இவரது மகனின் நண்பா் ஒருவா் மூலம் அறிமுகமான சென்னை தியாகராய நகா் முருகேசன் தெருவைச் சோ்ந்த பாா்த்திபன் தான் பங்கு வா்த்தகம் செய்வதாகவும், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் கூறினாராம்.

இதை நம்பிய ஆரோக்கியசாமி, தனது ஓய்வூதிய பணப்பலன் ரூ. 60 லட்சம், சேமிப்புப் பணம் ரூ. 40 லட்சம் என ரூ. 1 கோடியை பல்வேறு தவணைகளாக 2022-23 காலகட்டங்களில் பாா்த்திபனின் வங்கிக் கணக்குக்கு அனுப்பினாா். ஆனால் பணம் எதுவும் கிடைக்காததால், கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, 4 ஆண்டுகளாக பாா்த்திபன் அவரை இழுத்தடித்தாா்.

இதுகுறித்து ஆரோக்கியசாமி திருச்சி நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாா்த்திபன் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸாா், பாா்த்திபன் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.