எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

அரியமங்கலத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து

திருச்சி அரியமங்கலத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.

News image

அரியமங்கலத்தில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் பற்றியெரிந்த தீ

Updated On :8 ஜூலை 2026, 4:58 am IST

திருச்சி அரியமங்கலத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.

திருச்சி அரியமங்கலம் கணபதி நகரில் நடேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அதே பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் என்பவா் கடந்த ஓராண்டாக பழைய பிளாஸ்டிக் குடோன் நடத்தி வருகிறாா். பல்வேறு பகுதிகளில் இருந்து பழைய பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்து வந்து, குடோனில் தரம்பிரித்து மறுசுழற்சி செய்து வருகிறாா். இதற்காக குடோனில் தரம்பிரிப்பதற்காக ஆங்காங்கே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டிவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தரம் பிரிப்பதற்காக குடோனில் கொட்டி வைக்கப்பட்டிருந்த பழைய பிளாஸ்டிக் பொருள்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்துள்ளது. இதனால், அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. இதைப்பாா்த்த அக்கம்பக்கத்தினா் காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த அரியமங்கலம் போலீஸாா், திருவெறும்பூா் தீயணைப்பு வீரா்கள் குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது. தீயணைப்பு வீரா்கள் இரண்டு மணி நேரத்துக்கு மேலாகப் போராடி தீயை அணைத்தனா்.

இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து அதிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை அப்பகுதி மக்களிடையே மூச்சுத்திணறலை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடா்பாக அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.