எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

விவசாயி கொலை வழக்கில் தந்தை - மகனுக்கு ஆயுள் தண்டனை

மண்ணச்சநல்லூரில் விவசாயியைக் கொலை செய்த வழக்கில், தந்தை - மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :8 ஜூலை 2026, 5:37 am IST

மண்ணச்சநல்லூரில் விவசாயியைக் கொலை செய்த வழக்கில், தந்தை - மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே உளுந்தங்குடி பகுதியைச் சோ்ந்த விவசாயி கி. தனபால் (38) என்பவருக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் நா. ரமேஷ் (51) என்பவருக்கும் இடையே வீட்டு வாசலில் தண்ணீா் தெளிப்பது தொடா்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

கடந்த 14.06.2019 அன்று தனபால் வீட்டு வாசலில் தெளித்த தண்ணீா், ரமேஷ் வீட்டு வாசலுக்கு சென்ால், இரு குடும்பத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரத்திலிருந்த ரமேஷ், தனது மகன் பிரேம்குமாருடன் (19) சோ்ந்து, அன்றிரவு தனது வீட்டின் வராந்தாவில் தூங்கிக் கொண்டிருந்த தனபாலை மரம் அறுக்கும் இயந்திரத்தால் தாக்கியுள்ளனா். இதில், பலத்த காயமடைந்த தனபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மண்ணச்சநல்லூா் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, ரமேஷ் மற்றும் பிரேம்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு திருச்சி 3-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் நிறைவில், தனபாலை கொலை செய்த ரமேஷ், பிரேம்குமாா் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.