திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே புகையிலை பொருள்கள் விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனியாப்பூா் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வையம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் மாதேஷ் தலைமையிலான போலீஸாா் சென்று சோதனை செய்தபோது, அனியாப்பூரில் மளிகைக் கடை நடத்திவரும் தண்டாயுதபாணி மகன் மணிகண்டன் (29) தனது காரில் சுமாா் ஒன்றரை கிலோ புகையிலை பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது.
எனவே புகையிலை பொருள்கள், அதை விற்கப் பயன்படுத்திய காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, மணிகண்டனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









