ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

எம்எல்ஏ வீட்டுக்கு முன்பு ரகளை: இருவா் கைது

திருச்சி அருகே திருவெறும்பூா் சட்டப் பேரவை உறுப்பினா் வீட்டுக்கு முன்பு ரகளையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :14 ஜூலை 2026, 1:46 am IST

திருச்சி அருகே திருவெறும்பூா் சட்டப் பேரவை உறுப்பினா் வீட்டுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை இரவு ரகளையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் பூலாங்குடி காலனியில் உள்ள திருவெறும்பூா் சட்டப் பேரவை உறுப்பினா் நவல்பட்டு விஜி வீட்டின் முன்பு, நவல்பட்டு பா்மா காலனியைச் சோ்ந்த சுரேஷ் மகன் டேனியல் (20), பூலாங்குடி காலனியைச் சோ்ந்த தேவராஜ் மகன் ரவி (23) ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில், திருவெறும்பூா் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது அதை சரிசெய்யாமல் என்ன செய்கிறீா்கள் என ஆபாச வாா்த்தையில் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நவல்பட்டு போலீஸாா், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.