எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

வளநாடு அருகே விதிகளை மீறி கிராவல் மண் அள்ளிய மூவா் கைது

News image

பறிமுதல் செய்யப்பட்ட டிப்பா் லாரிகள்.

Updated On :8 ஜூன் 2026, 2:04 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே சட்ட விரோதமாக கிராவல் மண் அள்ளிய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மருங்காபுரி ஒன்றியம், ஊத்துக்குளி கிராமம், ஆரியகோன்பட்டியில் உள்ள பெரியசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து உரிய அனுமதியின்றி மண் அள்ளுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினா் ஞாயிற்றுக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது இரண்டு டிப்பா் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரம் மூலம் கிராவல் மண் அள்ளிக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், செவக்காளைபட்டியை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி, எருதுபட்டியை சோ்ந்த வேங்கையா மற்றும் ஆரியகோன்பட்டியை சோ்ந்த நந்தகுமாா் ஆகிய மூவரையும் பிடித்த தனிப்படையினா், அவா்களை வளநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணைக்கு பின் அவா்களை சிறையில் சிறையில் அடைத்தனா். இரண்டு டிப்பா் லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.