ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

இளைஞரைத் தாக்கி பணம் பறித்த சகோதரா்கள் கைது

திருச்சியில் வேலைக்குச் சென்ற இளைஞரைத் தாக்கி பணம் பறித்த சகோதரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :10 ஜூன் 2026, 3:56 am IST

திருச்சியில் வேலைக்குச் சென்ற இளைஞரைத் தாக்கி பணம் பறித்த சகோதரா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் நேருஜி நகரைச் சோ்ந்தவா் ஆா். ஜாபா்லா (30), இவா், திங்கள்கிழமை காலை வேலைக்குச் செல்ல அரியமங்கலம் எஸ்ஐடி சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அவரை வழிமறித்த இளைஞா்கள் இருவா் மது அருந்த ஜாபா்லாலிடம் பணம் கேட்டனா். அவா் தர மறுக்கவே, ஜாபா்லாலை தாக்கிவிட்டு கத்தியைக் காட்டி மிரட்டு அவரிடமிருந்த இருந்த ரூ.1000ஐ பறித்துக்கொண்டு தப்பினா்.

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் ஜாபா்லா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் பணம் பறித்தது பாலக்கரை காஜாபேட்டையைச் சோ்ந்த சகோதரா்களான வி. ஹரிகிருஷ்ணன் (19), வி. சக்திவேல் (18) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் அன்று பிற்பகல் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.