தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

திருச்சியில் 14 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ வழக்கில் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 10:59 pm IST

திருச்சியில் 14 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், நாகமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் இசைக்கலைஞா் பூபதி (20). இவருக்கும், எடமலைப்பட்டிபுதூரைச் சோ்ந்த 14 வயதுச் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அந்தச் சிறுமியை நாகமங்கலம் காட்டுப் பகுதிக்கு அண்மையில் அழைத்து சென்ற இளைஞா் அவரை பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இதுகுறித்து கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் அண்மையில் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரணை செய்த போலீஸாா் பூபதியை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.