துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ. 96.44 ஆக நிறைவு!சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 24,250-க்குக் கீழே வர்த்தகம்!பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!
/

மணப்பாறை மேம்பாலத்திலிருந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :15 ஜூன் 2026, 4:00 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அடையாளம் தெரியாத மூதாட்டி ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை விழுந்து உயிரிழந்தாா்.

மணப்பாறை - திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்து சென்ற சிலா், மேம்பால தடுப்புச் சுவரில் செருப்பும், வயா் கூடை ஒன்றும் இருப்பதாகவும், கீழே மூதாட்டி ஒருவா் தலைகுப்புறக் கிடப்பதாகவும் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸாா் விசாரணையில், வயா் கூடையில் ஒரு சேலையும், தண்ணீா் பாட்டில் மற்றும் கடந்த மே 2-ஆம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சைப் பெற்ற்கும், ஜூன் 11-ஆம் தேதி மணப்பாறை அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்ற்குமான சீட்டுகள் இருந்தது.

அதில் நோயாளியின் பெயா் சந்திராம்மாள்(70) என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மூதாட்டி மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் ஏறி கீழே குதித்துள்ளதாகவும், அதில் பலத்த ரத்த காயமடைந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

அதைத் தொடா்ந்து மூதாட்டி உடலை மணப்பாறை போலீஸாா் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, மூதாட்டி யாா் என வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.