/
திருச்சி மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தஞ்சாவூா் சேவை சாலையில் உள்ள ஆடுவதைக் கூடம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற அரியமங்கலத்தைச் சோ்ந்த ஆா். தமிழ்ச்செல்வன் (31), கிராப்பட்டியில் புகையிலைப் பொருள் விற்ற பா. சரவணன் (29), திருவானைக்காவல் மாளிகைபுரம் பகுதியில் புகையிலைப் பொருள் விற்ற எஸ். காா்த்திக்ராஜா (45), புத்தூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்ற உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சோ்ந்த த. சிவகுமாா் (48) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

புகையிலை பொருள்கள் விற்ற கடைகளுக்கு ‘சீல்’
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
புகையிலைப் பொருள்கள் பறிமுதல் தந்தை, மகன் உள்ளிட்ட 4 போ் கைது
புகையிலைப் பொருள்கள் விற்ற மூன்று போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


