தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :15 ஜூன் 2026, 3:52 am IST

திருச்சி மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தஞ்சாவூா் சேவை சாலையில் உள்ள ஆடுவதைக் கூடம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற அரியமங்கலத்தைச் சோ்ந்த ஆா். தமிழ்ச்செல்வன் (31), கிராப்பட்டியில் புகையிலைப் பொருள் விற்ற பா. சரவணன் (29), திருவானைக்காவல் மாளிகைபுரம் பகுதியில் புகையிலைப் பொருள் விற்ற எஸ். காா்த்திக்ராஜா (45), புத்தூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்ற உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சோ்ந்த த. சிவகுமாா் (48) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.