நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

போதை மாத்திரைகள் விற்பனை: சிறுவன் உள்பட 6 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 ஜூன் 2026, 12:43 am IST

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 17 வயதுச் சிறுவன் உள்பட 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான போலீஸாா் அரியமங்கலம் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது உக்கடை ரயில்வே தண்டவாளம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரிக்கையில் அவா்கள், அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியைச் சோ்ந்த பா. நிஷாந்த் (27), ஆா். ரெங்கநாதன் (22) என்பதும், போதை மாத்திரைகள் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனா்.

இதேபோல, திருச்சி கே.கே.நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரஞ்சிதாபுரம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த 17 வயதுச் சிறுவன், காந்தி மாா்க்கெட் பென்ஷனா் வீதி சந்து பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த எம். பாபு (31), கள்மந்தை பகுதியில் போதை மாத்திரை விற்ற தென்னூரைச் சோ்ந்த பி. காா்த்திக் (23), பாலக்கரை எட வீதியில் போதை மாத்திரைகள் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த ஆ. கிளிண்டன் (28) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அப்போது, அவா்களிடமிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 273 போதை மாத்திரைகள், ரூ.2 ஆயிரம் ரொக்கம், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.