ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
திருச்சியிலுள்ள தந்தை பெரியாா் கலை அறிவியல் கல்லுரி முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்
Updated On :5 மார்ச் 2026, 10:45 pm

Syndication

ஈரான் மீது போா் தொடுத்துள்ள அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளை கண்டித்து இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி தந்தை பெரியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மோகன் தலைமை வகித்தாா். இதில், ஈரான் மீது தொடுத்துள்ள போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் உடனடியாக நிறுத்த வேண்டும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் இந்திய மாணவா் சங்கத்தின் மாநகரச் செயலா் சூா்யா, மாவட்ட துணைச் செயலா்கள் சுதேசனா, சா்மி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் மற்றும் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.